Saturday, January 29, 2011

சிந்தனைக்கு …..

சிந்தனைக்கு …..
-----------------
பணம் இருப்பவன் சொல்வதெல்லாம் வேதம் !!
கட்டி கொடுத்த சோறா ? சொல்லிக் கொடுத்த வார்த்தையா ?
இது நிலைக்குமா ?

புகழ்ந்து புகழ்ந்து பேசினாலும் “வாழ்நாள் ” வளராது !!
இகழ்ந்து இகழ்ந்து சாடினாலும் நம் வாழ்வு கெட்டு போகாது !!

சுகமும் துக்கமும் ஒரு சக்கரம் !! மேலும் கீழும் போகும் வரும் !!
நிழலாக நாம் செய்த பாவம் மட்டும் நம்மோடு !!
கனவில் கண்ட உணவை சாப்பிட முடியுமா ?

நான் எழுதும் ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்க வேண்டும் !! அது போதும் எனக்கு !! என் மனம் நிறையும் !!!

ஆசை எது ? பொறாமை எது? கோபம் எது??
கடும் சொல் எது? இதை எல்லாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு விட முயல்வோம் !!
பகை வளர்க்கும் இதனால் என்ன லாபம் ??
எவ்வளவு நாள் வாழ்ந்தோம் ? வாழ்வோம் ?? இது முக்கியமா ?
எப்படி வாழ்ந்தோம்?? இது முக்கியமா? சொல்லு நட்பே!!
சொல் மனம் திறந்து !!

பிறர் கஷ்டம் நமக்கு ஆறுதல் தருமா ? முட்டாளா நாம் ???

முடிந்ததை விடாமல் முயற்சியோடு செய்வோம் !!
முடியாது என சொல்லாமல் !!

பார்த்து உணர்ந்த அனுபவமும் ஒரு வகை கல்விதான் !!
ஏமாந்து சஞ்சலத்தில் சலிப்பில் உணர்வதும் ஒரு
அனுபவக் கல்விதான்!!
sasikala
kavithaisasikala2000@gmail.com

No comments:

Post a Comment