Saturday, January 15, 2011

அன்புடன் என்றும் .... சசிகலா

அறிவோடு அழகோடு புதுமை யோடு
பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!
முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்
வெற்றியில் ஆடட்டும் !!
விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..
இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!
குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!
பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்
நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!
இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!
வளமோடு நலமோடு அன்போடு அருளோடு
பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!
பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!
வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!
மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!
சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!
வாழ்க!! வாழ்க!!
--------------------------------------------------------
பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு
தை தை தை தை என தை மகள் வந்தாள்!!
உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!
சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!
காதலும் வீரமும் காளையர்க்கே!!
காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!
புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி
ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்
மங்கையர்க்கும் ஓர் நாள்!!
அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!
சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??
நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்
"சங்கரன் பொங்கல்" திருநாள்!!
உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு
பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!

அன்புடன் என்றும் ....
சசிகலா
kavithaisasikala2000@gmail.com

No comments:

Post a Comment