Thursday, January 6, 2011

பொங்கல் திருநாள்!!

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு
தை தை தை தை என தை மகள் வந்தாள்!!
உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!
சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!
காதலும் வீரமும் காளையர்க்கே!!
காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!
புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி
ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்
மங்கையர்க்கும் ஓர் நாள்!!
அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!
சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??
நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்
"சங்கரன் பொங்கல்" திருநாள்!!
உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு
பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!

No comments:

Post a Comment