Wednesday, February 23, 2011

உலவுதே என் மனமே!! அள்ள துடிக்குதடி!!

கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
அறியா குழந்தை பருவம் நீங்கி ஆவலுடன்
உன்னை அறிய வந்தேனே!!
நிலவின் ஒலியினில் வீசும் தென்றலில் அலைகளின் இடையே
படகில் சென்று தன்னை மறந்து நாம் செல்வோமா?
தனி உலகம் காண்போமா? அது நமதல்லவா?
குவலயம் முழுதும் குதுகலமே..உன்னுடன் சேர்ந்த பின்னே உறவே!!
உன் கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
-----------------------
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
பட்ட துயர் போதும் இனி தொடராமல் தடுத்து விடு !!
எங்கும் எதிலும் நீ ஆனால் என் உயிரும் உனதன்றோ?
எது வரினும் நான் எது செய்யினும் அது உன்னருளே!
என் தேவை நீ அறிவாய்!! எனை கேட்க வைக்காதே!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
உறங்கும் மனம் எழுப்பி விடு!! உற்ற வழி காட்டி விடு!!
என்னை உணர வைத்து உன்னில் கரைத்து விடு!!
நான் எக்குற்றம் புரிந்தாலும் மறந்தென்னை ஏற்று விடு!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!




அன்பையும் காதல் என்பார்! ஆசைமனம் காதல் என்பார்!!
இன்பம் அதே காதல் என்பார்!!
இசையும் உள்ளம் காதல் என்பார்!!
உடல்பசியும் காதலாமோ? உளம் தேடல் காதலாமோ?
உணர்வு நாடல் காதலாமோ ?
உயிர் உள்ளவரை உறவு வேண்டல் காதலாமோ?
நட்பும் காதலாமோ? களவு மனம் காதலாமோ?
உடல் அழகில் ஆரம்பித்து உணர்ந்து கூடல் காதலாமோ?
இன கவர்ச்சி இரு பக்கம்!!
ஆணும் பெண்ணும் இன்றி வாழ்வு இல்லை!!
மனம் கவர்ந்தால் அது காதல் ஆமோ?
எது காதல்? எது காதல்? எது காதல்?
விளக்கை தேடும் விட்டில் என வீழ்ந்து அழுதல் வீண் அன்றோ?
தன்னை அடக்க முடியாமல் தவிக்கும் இந்த இளமை வேகம்...
கொண்டதே கோலம்! வந்ததே வாழ்வு!!
சிந்திக்க மறந்து ஐந்து அறிவாய் வாழ்வு ஒடிந்து போனாரே!!
காதலிதா? காதலிதா? காதலிதா?முக அழகா ? புன்சிரிப்பழகா ? பேச்சழகா ? குரல் அழகா? கண் அழகா?
சங்கு கழுத்து அழகா? முட்டும் முன் அழகா? இடை அழகா?
தண்டு கால் அழகா? உடை அழகா? உடுத்தும் விதம் அழகா?
அறிவு அழகா? அது தரும் ஆற்றல் தான் அழகா?
குணம் அழகா? அன்பு அழகா? பண்பு அழகா?
செயல் அழகா? செய்முறை அழகா?
அன்பறிவு ஆற்றலுடன் திட்டமிட்டு முயன்று முன்னேறல் அழகா?
எது அழகு? எது அழகு? சொல் நட்பே!!சிந்தா மனமுடன் சிந்தனை செய்து
பொறுமைக்கு பெருமை சேர்த்து
தாய்மை என்றும் எளிமை என
வாய்மையோடு வாஞ்சையோடு
வாழ்ந்திருக்கும் அம்மா!! உனக்கு இணை எது? ஏது?ஆணவம் அகற்றி ஆசை விலக்கி பண்பை வளர்த்து
படிப்பை தொடந்து உண்மையாய் நின்று உறுதியாய் உழைத்து
அன்போடு யாவர்க்கும் அன்னமிட்டு
சொல்லாலும் செயலாலும் ஒன்றாகி உடல் வலிமை பேணி வர
உயர்வும் நிம்மதியும் என்றும் உன் பக்கம்!!
அயராது முயன்றால் !!!


ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!
சூடி எறிவது மலர் ஆனால் ஆதிக்க ஆண்மகன்
தான் அடைந்த பெண்ணையும் மறுப்பானோ?
மன்னவன் என்னவன் என்றாளே!!மனதுக்குள் அழுவதற்கோ !?
பற்பல மலர்கள் பாந்தமாய் வாசம் தர ...
பெண்ணும் அதுபோல் என எண்ணலாமோ?
மனம் போல் வாழும் மன்மத மனம் "மணம்"
என்ற போர்வையிலே சிதைக்கலாமோ?
மனைவி அன்றோ?
காலம் கடந்து "குணம்" கண்ட பெண்ணும் கொதித்து எழாமல்
குமைந்து இழப்பது அவள் வாழ்வு தானே!! குல விளக்கோ?
அமைதியும் ஆற்றலும் இழந்து பொய் நகை முகம் கொண்டாளே!!
போலி வாழ்க்கை !! பொய் அன்பு!!அதை காதல் என வீழ்ந்தாளே!
காதல் மணம் மோதலுடன் வாழுதிங்கே!!
பணம் பரிசு பகட்டு என்று பட்டறிந்து அழுவதோ
புண்பட்ட காதல் மனம்??
உண்மை அன்பு காதல் என்றால்
அதற்கு ஏன் "காதலர் தினம்"??
சாகும் வரை இணைந்து வாழ்வதுதான் காதல் !!
உன்மத்த மோகம் எல்லாம் காதல் ஆமோ????
உணராது போனால்...உள்ளவரை துன்பம் தானே!!
ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!"கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என் உயிரோடு நீ கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி கண்ணே!!."
கட்டி அணைத்து தலை முதல் கால் வரை என் முத்தத்தால் நனைத்து வருடி பகல் இரவு பாராமல் உள்ளமும் உடலும் கலந்து
எனக்கு நீ உனக்கு நான் என உலா வருவோம் வா கண்ணே!!
சிரிக்கும் சிங்காரி!!சங்கு கழுத்தும் குத்தும் முன் அழகும்
அழகு சின்ன இடையும் பித்தம் ஏற்றுதடி!! வாழை தண்டு கால் அழகும்
வடிவும் உன்னை அள்ள துடிக்குதடி!!
-----------------------------------



Thursday, February 17, 2011

நீரோட்ட கனவுகள் ஊர்கோலம்!!

நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
தேனில் நனைந்தது என் உள்ளம்!!
மாலை சூடும் நேரம் காண நாடும்!!
மங்கள வாழ்த்தொலி கீதம் வேண்டும்!!
மணமகளாய் நான் இருக்க வேண்டும் !!
மனம் நாடும் மணாளன் வேண்டும்!!
மடி சாய்ந்து "இனம்" காக்க வேண்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
ஆயிரம் நிறங்கள் ஜாலம்!!
வான வில்லும் என் வீட்டில் கோலமிடும்!!
விண்மீன்கள் வெளிச்சம் தரும்!!
பாடும் பறவைகள் தாளமிடும்!!
பூமரங்கள் பூக்கள் பொழியும் !!
என் திருமண நாளை எண்ணி எண்ணி
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
மடை திறந்து தாவும் நதியலையாய் என் மனம்!!
மனம் திறந்து கூவும் சிறு குயில்தான்  நான்!!
காலம் கனியட்டும்!!கதவுகள் திறக்கட்டும்!!
நேற்று என்பது  நிழல்களில் நாடகம்!
இன்றோ   நிஜங்களின் தரிசனம்!!
வருங்காலம் வசந்த காலம்!!வரட்டும் வரட்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!

நமசிவாயமே!! 17 2 2011

அன்பே சதம் என்றும் அது ஒன்றே சிவம் என்றும்
அகிலம் உணர வைத்த நாமம் நமசிவாயமே!!
ஆசையோடு ஆணவம் அகல "அகம்" உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
இளமையும் வளமையும் கல்வியும் கடமையும் கனிவும் பணிவும் வளர்த்திடு நாமம் நமசிவாயமே!!
உணர்ச்சியும் புணர்ச்சியும் உன்னத வாழ்வும்
உணர்த்தும் நாமம் நமசிவாயமே!!
ஊழும் வினையும் ஊக்கமும் ஆக்கமும் உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
ஈகையும் இயல்பாய் எண்ணம் சேர்த்திடும்
ஈசன் நாமம் நமசிவாயமே!!

எல்லாம் கடந்து எனது அறுத்து எளிதில் உணரா மனமாய் நிற்பதும் நமசிவாயமே!!
ஏகமாகி பாகமாகி போகமாகி யோகமாகி யாகமாகி
யாதும் ஆன நாமம் நமசிவாயமே!!
ஐயம் தவிர்த்து ஐந்தும் உணர்த்தி தன்னை உணர செய்திடும்
நாமம் நமசிவாயமே!!
ஒன்றாகி பலவாகி அகமாகி புறமாகி வாழ்வுமாகி நின்ற
பெரும் உறவும் நமசிவாயமே!!
ஓம் என்று ஓத ஒன்பது வாசலும் ஒடுங்கும்
நவகோள் நாடும் நாமம் நமசிவாயமே!!
அவ்வைக்கு தமிழ் அருளி யாவர்க்கும் அவுசதமாய்
அன்பு மனம் கொண்டருளும் நாமம் நமசிவாயமே!!
ஆணவ கன்ம மாயை எனும் "ஆயுதம்" தான் எல்லா குறையும் மேவசெய்து தன்னை மறக்க செய்யும் என உறைந்ததும் நாமம் நமசிவாயமே!!

Sunday, February 13, 2011

நிலவை காதலித்தேன் !!

நிலவை காதலித்தேன் !! தேய்ந்து மறைந்தது ஒரு நாள்!!
தென்றலை காதலித்தேன்!! புயல் ஆனது!!
நதியை காதலித்தேன்!! கொஞ்சம் கொஞ்சமாக வற்றியது!!
பூவை காதலித்து சூடினேன்..வாடியது!!
என்ன செய்ய?? எனக்கு காதலிக்க தெரியவில்லையா?
வெறியோடு உழைக்க தொடங்கினேன்!!
உழைப்பின் மீது காதல் வர ..நட்பு வட்டம் பெருகி
உலகம் புரிகிறது!!
அழகு ரசிக்க..  பலம் ருசிக்க..
காற்று சுவாசிக்க
நட்பு நேசிக்க
நீ.!!!. நான் காதலிக்க!!... 

காதல் காவியம் 14 02 2011 என் காலம் ஓடும்!!

அவள் :
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
தூங்காமல் நாள் எல்லாம் பாழாக .....
உன் நினைவு மட்டும் என்னை சிதைக்கிறதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
உடல் சேர்ந்து உளம் காணும் உன்னத திருமணம் தான் எப்போது??
நம் மனம் சேர்ந்து "திருமணம்" காண
உறவெலாம் வருமே! வாழ்த்துமே !!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவன்:
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனே!!
பெண்ணே! உன்னை பார்த்ததும் என்னை இழந்தேனே !!
தேனாட்டம் இனிக்கும் உன் இதழும் கள்ளாய் போனதோ?
போதை ஏறி என் சொல்லும் ஆடுதே!!
அப்படி இப்படி இடுப்பை ஆட்டி என்னை கொல்லாதே!
குனிஞ்சு நிமிர்ந்து "குளிர்ச்சி" காட்டுற!!
என் மனமும் உடலும் குளிர்ந்து போனதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
நம் கண்ணுக்குள் நெஞ்சுக்குள் மாற்றம்!!
கனவில் காதலில் ஏற்றம்!!
சொந்தமாக நீ வந்து விட்டால் கொஞ்சி மகிழ்வேனே !!
உடலில் உணர்வில் ஏக்கம் !! இதான் காதலா?
100 ஆண்டுகள் வாழ்வோமே நாமே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவனும் இல்லை அவளும் இல்லை ஆனால்
காதல் காவியமாய் நிற்கிறது தாஜ் மஹால் !!
காதலுக்கு மரியாதை !! காதலர் தினத்துக்கு இன்னொரு மறையா நினைவு!!
நாமும்  இன்னொரு காதல் காவியம் படைப்போம் வா வா!!

---------------
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆயிரம் நினைவோடு கனவோடு என் மனம் ஆட
பாயிரம் பல்லாயிரம் கல்யாண ராகம் பாட
உலகம் உறங்க தூங்காமல் என் மனம் மட்டும் வாட
நீ இன்றி நான் இல்லை!! இதை என்று உணர்வாய் நீயே??
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
மனம் நினைக்க சுகம் வந்தது!!
உன் கவி என்றும் எனக்கு பூபாளம்!!
என் ராகம் என்றும் சோகம் அல்ல!!
மணி ஓசையாய் உனை பாடுவேன்!!
என்னை சுற்றும் ஆவியடி நீ!!
காதல் சோதனை !! என் மனதில் வேதனை!!
அன்பு பூ மாலை சூடி நிழலாக உன் வாழ்வெல்லாம் தொடர்வேன் உன் நாமம் என் மந்திரம் !! உணராயோ தோழி !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆசைகள் கோடி அனுதினம் பெருக... நிறைவேற
அருள் தா என் தேவி என் அருகமர்ந்து !!
இரு மனம் வேண்டாம் ! மயங்காமல் ஏங்காமல்
ஒரு மனமாய் என் உயிர் கலப்பாய்!!
உன் தேவை முடிக்க மண்ணுக்கு மழை என வருவேனே!!
விண்ணெல்லாம் சுற்றி வருவோம்!! வா! வா!!
மேற்கில் உதயம் வராது !! நீ இன்றி எனக்கு வாழ்வு அமையாது !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
கை கோர்த்து வாழும் நாள் வரை இணைவோம் !!இணைவோம்!!
உன்னவனாய் உன் மடியில் உயிர் விடுவேன்!!அதுவரை
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
------------------------

உடலும் உயிரும் இயங்க மனம் பிறந்தது !!
மனம் என்றும் நம் உயிரின் அலை!!
வாழ்வின் இன்பங்கள் யாவும் முழு வேகத்தில்
முடிக்க முயலும் நம் இளமை மனம்!!
உரியவரிடம் உதவி பெற்றாலும் ஏற்காமல் தடுமாறும் மனம்!!
தன்னை மதிப்பதில்லை அது அங்கீகாரம் இல்லை என ஏங்கும்!!
தாயின் காலடி தான் சொர்க்கம்!!தாய்க்கு பின் தாரமா?
தாரம் வந்தபின் தாய் ஓரமா? எது உண்மை??
தாயை போற்ற தந்தையை பேண நலம் மேவும் ...
சங்கட பாம்புகள் துரத்தினாலும்!!
மற்றவரை நாடி மனம் சலித்து ..கஷ்டங்களில் வீழ்ந்து..
முன்னேற முயல்வோம்!!
--------------------------
நட்பு என்றும் வழிகாட்டி...
இன்பமா? துன்பமா? தயக்கமா?
உண்மை நட்பு தோள் கொடுக்கும் !!
தேர்ந்து நட்பை எடு!!
எதையும் எதிர்பாராதது நட்பு!!
புகழ் ...வெறுப்பு கடந்து சுயநலம் காணாதது நட்பு!!
தலைக்கனம் இல்லாதது நட்பு
குழந்தையாக .. இளம் பெண்ணாக,
இளமை குறும்புக்கு ..நட்பு!!
முதுமையிலும் மனம் விட்டு பேசிட உறவாக...உறு துணையாக ..
மனிதனாக்குவதும் எல்லாம் உணரவைப்பதும் நட்பு!!,
உயர்த்துவதும் ..சிரித்து, அலுத்து, அழுது..அடம் பிடித்து ..உடன் இருந்து உயிர் காக்கும் நட்பு!!துன்பமும் இன்பமும் பெரிதல்ல உண்மை நட்பு இருக்கும் வரை !!
உணர்ந்து விடு நட்பின் பெருமை! அருமை!!
----------------------------------
கொல்லாதே அழகே!! என் கண்ணை கிள்ளாதே!!
மெல்லிடை..மேலழகு மின்னலாய் வந்து கொல்லுகிறாய்!!
மேகத்தை மெத்தையிட்டு பனித்துளி நீ நீராட சேர்த்து வைத்து..
நாம் கை கோர்த்து வெண்ணிலவில் வீடு கட்டி குடி புகுவோம் தொல்லை இன்றி!! வா அன்பே!!
ஆகைய உயரம் அம்மா அன்பு!! அடுத்தது நீதானே!!
அரைத்த மாவை அரிக்காமல் கலப்பு இல்லா கற்பனையில் புதிய வடிவம் சேர்த்து..காலமும் நேரமும் வாய்ப்பும் பார்த்து வழமை சேர்ப்போம் !! பொலிவான புதுமை காண்போம்!! வாழ்வது ஒரு முறை!! வாழ்த்தட்டும் தலைமுறை!! என்னவளே!!வா! வா!!
-------------------------
sasikala
kavithaisasikala2000@gmail.com