Thursday, February 17, 2011

நீரோட்ட கனவுகள் ஊர்கோலம்!!

நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
தேனில் நனைந்தது என் உள்ளம்!!
மாலை சூடும் நேரம் காண நாடும்!!
மங்கள வாழ்த்தொலி கீதம் வேண்டும்!!
மணமகளாய் நான் இருக்க வேண்டும் !!
மனம் நாடும் மணாளன் வேண்டும்!!
மடி சாய்ந்து "இனம்" காக்க வேண்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
ஆயிரம் நிறங்கள் ஜாலம்!!
வான வில்லும் என் வீட்டில் கோலமிடும்!!
விண்மீன்கள் வெளிச்சம் தரும்!!
பாடும் பறவைகள் தாளமிடும்!!
பூமரங்கள் பூக்கள் பொழியும் !!
என் திருமண நாளை எண்ணி எண்ணி
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
மடை திறந்து தாவும் நதியலையாய் என் மனம்!!
மனம் திறந்து கூவும் சிறு குயில்தான்  நான்!!
காலம் கனியட்டும்!!கதவுகள் திறக்கட்டும்!!
நேற்று என்பது  நிழல்களில் நாடகம்!
இன்றோ   நிஜங்களின் தரிசனம்!!
வருங்காலம் வசந்த காலம்!!வரட்டும் வரட்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!

No comments:

Post a Comment