Thursday, February 17, 2011

நமசிவாயமே!! 17 2 2011

அன்பே சதம் என்றும் அது ஒன்றே சிவம் என்றும்
அகிலம் உணர வைத்த நாமம் நமசிவாயமே!!
ஆசையோடு ஆணவம் அகல "அகம்" உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
இளமையும் வளமையும் கல்வியும் கடமையும் கனிவும் பணிவும் வளர்த்திடு நாமம் நமசிவாயமே!!
உணர்ச்சியும் புணர்ச்சியும் உன்னத வாழ்வும்
உணர்த்தும் நாமம் நமசிவாயமே!!
ஊழும் வினையும் ஊக்கமும் ஆக்கமும் உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
ஈகையும் இயல்பாய் எண்ணம் சேர்த்திடும்
ஈசன் நாமம் நமசிவாயமே!!

எல்லாம் கடந்து எனது அறுத்து எளிதில் உணரா மனமாய் நிற்பதும் நமசிவாயமே!!
ஏகமாகி பாகமாகி போகமாகி யோகமாகி யாகமாகி
யாதும் ஆன நாமம் நமசிவாயமே!!
ஐயம் தவிர்த்து ஐந்தும் உணர்த்தி தன்னை உணர செய்திடும்
நாமம் நமசிவாயமே!!
ஒன்றாகி பலவாகி அகமாகி புறமாகி வாழ்வுமாகி நின்ற
பெரும் உறவும் நமசிவாயமே!!
ஓம் என்று ஓத ஒன்பது வாசலும் ஒடுங்கும்
நவகோள் நாடும் நாமம் நமசிவாயமே!!
அவ்வைக்கு தமிழ் அருளி யாவர்க்கும் அவுசதமாய்
அன்பு மனம் கொண்டருளும் நாமம் நமசிவாயமே!!
ஆணவ கன்ம மாயை எனும் "ஆயுதம்" தான் எல்லா குறையும் மேவசெய்து தன்னை மறக்க செய்யும் என உறைந்ததும் நாமம் நமசிவாயமே!!

No comments:

Post a Comment