Monday, January 3, 2011

வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை!!

வேதனை இன்றி சாதனை இல்லை!!
------------------------------------------------------------------

முயற்சி இன்றி முடங்கி கிடப்பதோ ??
உறங்கி கிடக்கும் திறமை..அதை தட்டி எழுப்பு!!
தோல்விகள் வரலாம் !! துவளாதே !!
துணிவோடு நம்பி உன்னை நம்பி களம் இறங்கு!!
சாதனை தேடி வரும்!! வேதனை இன்றி சாதனை இல்லை!!
-----------------------------------------------------------------------------------------


வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை !!
-----------------------------------------------------------------------------------
அழித்து வாழும் மிருகம் நிலம் பார்த்து நடக்கும்!!
அமீபா முதல் அப்துல் கலாம் வரை பகுத்துணர்ந்து..படித்துணர்ந்து ..
நன்றும் தீதும் வேறாய் அறியும் "ஆறாம்" அறிவை பெற்ற மனிதனோ
"எல்லாம்" பெருக்கி அழிக்கிறான்!!
தாயால் அன்பு உணர்ந்தோம் !!தந்தையோடு..இறைவன், மதம் ஜாதி இனம் சமயம்
பண்பாடு சுற்றுசுழல் ...உணர்ந்தோம்..
வளர்ந்த  விதத்தால் மாறுபட்டு மாறுபட்டு  உணர்ந்து தெளிந்தோம்!!
நாம் யார்? பிறப்பதற்கு முன்பும் இறந்த பின்பும் எங்கு இருந்தோம்?
எங்கு இருப்போம்??
தன்னை -தன் திறனை உணர்ந்து செல்வழி வகுத்து முறையாய்
தொடர்ந்தால் தோல்வி ஏது??
முயன்று விடு!! முழு மனதாய்!!--உன் மீது நம்பிக்கையோடு!!
நலம் பெருகும்!! வாழ்ந்து காட்டுவோம்!! வயதாகிவிடவில்லை !!
வா நட்பே!!

No comments:

Post a Comment