Wednesday, December 8, 2010

கடலின் ஆழம்!!

கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ?
தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு
எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம்
நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...
தன்னை உணர்ந்தவர்  யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ..
உண்மை உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில்
ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!!
தேர்ந்து தெளிந்து விடு!! சிவம் ஆகு!!

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL),
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
you are requested to join in my community
SASIKALA

No comments:

Post a Comment