Wednesday, December 29, 2010

மீட்பரே!! 29 12 2010, வழுக்கையும் நரையும்....

மீட்பரே!!
தங்கள் மந்தையில் இருந்து ஆடுகள் தமக்கும்..தம் குடும்பத்தாருக்கும்
என செல்வம் சேர்க்க போகாத வழி சென்று...தன்னால் ஆனதெல்லாம் செய்து...
நிலைக்காது என உணர்ந்தும்..உணராமலும்...சேர்த்து ...
மீளும் வகை அறியாது சென்று விட்டன...செல்கின்றன...
இயேசுவே!! தங்களின் பரிசுத்தம் அவர்களின் ரத்தத்தில் சென்று அவர்களை தன்னை உணர செய்து மேலும் மேலும் குற்றம் புரியாவண்ணம் காத்து ரட்சிப்பது தங்கள் கடன் ஆகும்...ஆமென்!!
எம்மதமும் சம்மதம்!! எல்லோரும் ஒன்றே!!ஏற்று அருள்வீர்!!
தடுத்து ஆட்கொண்டு ஆசீர்வதியும்!!...இளைப்பாறுதல் தருவீர்...ஆண்டவரே!! அன்போடு அன்னமிட்டு அனைவரும் ஒற்றுமையாய் உணர்ந்து உயர்ந்து வாழ அருள்வீர்...ஆமென்!!
--------------------

வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!
----------------------------------

புள்ளிமான்கள் சிங்கங்களை
சிறை வைக்கும் அற்புத காடு காதல்!!

No comments:

Post a Comment