Tuesday, December 14, 2010

மாமா மாமா வா மாமா !!

மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!
தந்தானே தான தன்னே தந்தானா தான தன்னே தந்தானா
புழு பூச்சி காணலியே!! சொல்லிகாட்டி கொல்லுவாங்க மாமா!!
மலடி பட்டம் கட்டி வைத்து மயங்க விட ஆசையா ?
அவன் :
தங்கை தம்பி கல்யாணம் தலைக்குமேல நிக்குதடி
அத முடிச்சு ..நம்ம குடும்பம் பெருக்குவோமடி!!
அது ஒன்னே வேலை எனக்கு ..மறக்கமாட்டேன்டி!! ..
அவள் : என்ன பேச்சு பேசுற ..மக்கு மாமா??
காலத்திலே செய்யாத "வெள்ளாமை" இருந்தென்ன லாபம்??
பேசாதே..போய் விடு.. உனக்கு எதுக்கு கல்யாணம்..
மனைவி மக்கள் எல்லாம்??
அவன் :
இடி வார்த்தை வேண்டாமடி !!
என் மனசு புரியவில்லை ..போடி!!
தாய் ஆகும் தகுதி உனக்கு உண்டு..
தவிக்கும் மனசு எனக்கு உண்டு!!
கடமைக்காக காத்திருக்கேன்!! கவலாதே கண்ணே!!
இது மட்டும் கடமை இல்லையா ..வெட்டி பேச்சு ...வீண் வார்த்தை..
எனக்குதானே..உனக்கென்ன??
மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!

No comments:

Post a Comment