Monday, December 6, 2010

திருமணம்!! அடிக்கரும்பு!!

இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!! -------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------




அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

No comments:

Post a Comment