Tuesday, November 30, 2010

உன் பார்வை.......…உடல் நனைய ஆசை!!

உடல் நனைய ஆசை!!
--------------------
பூவாய் பொழியும் மழை!! உடல் நனைய ஆசை!!
உள்ளம் குளிருமே!! மனம் எங்கோ செல்லுமே!!
ஆடி பாடி அசரும் வரை ...நனைய வேண்டும்!!
இருந்தாலும் நனைந்த உடைக்குள்.....
தேடும் கண்கள் உண்டே!! அதை நினைத்து ...
பரவசமும் பாதி ஆச்சு!! அம்மாவிடம் இல்லாதையா
என்னிடம் பார்க்கிறாய்!! ?? முட்டாளே!!
--------------------------
புணர்ச்சி
உடல் இணைந்து உயிர் ஒன்றாய் நிலைக்கும்
புனிதம் தான் புணர்ச்சி !! இணைந்த அன்பின் கிளர்ச்சி!!
தன் துணை நிலை கண்டே புணரும்..மிருகம் !!..
ஆறு அறிவே!! அதைவிட கீழா நீ!!??
விரிசரில் பரிசல் ஓட்ட இச்சை வெறி!!
குழந்தைகளிடம் கடவுளைக் காணாமல்
கலவி கொண்ட அரக்க மனம்!!
இதுவா மனிதநேயம்.???.
------------------------

உன் பார்வை…
-------------------
உடைக்குள் அடங்காமல் திமிறும்
உன் அழகைக் காண திணறும் மனம்
தீ பிடித்து எரிகிறதே தினம் !!!
தெரியாமல் உன் கை பட்டு
தூளாகிப்போனதடி என் நெஞ்சம்!!
காற்றில் ஆடும் கேசம் என் முகத்தில் பட்டு...
வாசம் பட்டு ...சுவாசம் கெட்டு....என்ன செய்ய??
யாரிடமோ நீ பேச ...என்னை இழந்தேன் நான்!!
கட்டுப்படுத்தி வைத்த மனம் அடங்காமல்....
முத்தமிட ஏங்குகிறதே!! நகர்ந்து செல்லும் ..
உன்னை சுற்றி நாய்குட்டியாய் தொடர்கிறதே !!
ஒன்றும் சொல்லாமல் எங்கோ பார்த்தபடிபோக
உன்னால் மட்டுமே முடியும்!!
என் மனம் தெரிந்தும் ....ஒன்றும் அறியாதவள் போல்
இருக்க உன்னால் மட்டுமே முடியும்!!
வதைக்கும் மனம் பெண்களுக்கு மட்டுமே உண்டு!!
ஏன் பிறந்தேன்? நான் குழந்தையாய் இருந்தாலும்
 கொஞ்சிப்போவாயே !! குமுறுதடி மனம்!!
-------------------------------

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com
29.11.2010

No comments:

Post a Comment