Monday, November 29, 2010

நட்பு!! புது பொண்ணு படும் வெட்கம்!!வெண்ணிலவே!! காம பூஜை !அம்மா!சசிகலா!! வாழ்க்கை!! சிரிக்கும் பூவே!!

நட்பு!!அழகை பார்த்து வராது!!
வயதை பார்த்து வராது!!
ஆண்பெண் பார்த்து வராது!!
மொழி, மதம்..நாடு பார்த்து வராது!!
விலை கொடுத்து வாங்க முடியாது!!
தானாக வரும்!!
மிக பலமாக தொடரும் நட்பு!!
ஒருவரை ஒருவர் பார்க்காமலே!!
இதற்கு ஈடு ஏது?
---------------------------------
புது பொண்ணு படும் வெட்கம்!!

வண்ணக்கனவில் சுற்றித்திரியும் எண்ண மலர்கள்!!
நிலவை சுற்றும் விண்மீன்கள் என் உறவை விடக்கம்மி !!
தான் சேர்ந்த இடமாக மாறும் நீர்! பெண் மனமும் அப்படித்தான்!!
கண்டதில்லை!! பேசிப்பழக வில்லை!!
தலை ஆட்டி தவிக்கும் மனம் யார் அறிவார்?
அடுத்த வீடும் அந்நியமாய்...ஒதுங்கிப்போகும்
பட்டண வாழ்வு!!
உடல் சேர்ந்து "உள்ளம்" காண
காத்திருக்கும் திருமண வாழ்வு!!
"நல்ல உள்ளம்" என் பாதி ஆனால் உயிர் உள்ளவரை
இன்பத்தோட்டம்!!
விட்டுக்கொடுத்து அன்பு செய்தால்
தேன் நிலவில் தென்றல் வீசும்!!
ஒருவரை ஒருவர் உணர்ந்து
உள்ளம் சேர்ந்தால் உவகை தானே!!
ஏதேதோ எண்ணங்கள்!!மயங்கும் உள்ளம்தான்
மௌனமாக ........கடல் போல!!
உயர்வேனா? உற்ற நட்பே நீ கூறு!!
என் கணவனைத்தான் காதலிப்பேன்!!
வெட்கத்தில் கவிதை உள்ளம்!!
உற்ற நட்பே! உண்மை கூறு!!
---------------------------------
வெண்ணிலவே!! என்னை கண்டு வெட்கமா?
உன்னை பார்க்க வருகிறேன்!!
மேக தாவணி மறைக்கிறதே!!
என்னை நிலா என்கிறார்கள்!!
வெட்கம்!! வெட்கம்!!
---------

கருவறைக்குள் காம பூஜை !! முட்டாளாக்கி வரும் அவர்களை நம்புவது ஏன்???கடவுளை புரிந்து கொள்ள கண்டவன் காலில் விழுவது ஏன்?
உன்னை புரிந்து தன்னை கொடுத்து உயிர் உள்ள வரை உடன் வரும்
மனைவியின் மனதை ...உன் மனதை புரிந்து.... திட்டமிட்டு அதன் வழியில் சரியாக செல் படு...அது போதும்!! இன்ப துன்பம் பகிர்ந்து நிம்மதியை தேடு!! அதில் இறைவன் இருக்கிறான்!! இனிமையான இல்லறம்தான் நல்லறம்!!துறவறத்தின் தூய்மை துண்டாகி நிற்க
....தேவை அற்றதை தேடி போகாதே!! இனிய மனமே!!
--------------------------------------------------------

அம்மா!
குடும்பத்தின் கோபுரமே!! அம்மா!
உன்னை கண்டதும் கவலை போச்சு!!
ஓய்வு இன்றி உழைக்கும் உன்னை பிரிய மனம் இல்லை!!
காலமெல்லாம் உன் மடியில்...
கண் அயர்ந்து தூங்க வேண்டும்!!
விதவிதம்மை பரிசெல்லாம் விம் முட்ட தர வேண்டும்!!
பெற்று எடுத்து பேணி வளர்த்து பெரியவளாய் ஆக்கி விட்டாய்!!
உன்னை காக்கும் மருந்து என்னம்மா !!
உன் மடியில் உயிர் விட ஆசை!!
இப்படித்தான் வாழ வேண்டும்
சொல்லி சொல்லி வளர்த்தாயே!!
குடா நட்பு குடியை கெடுக்கும்!!
செல் போன் பேச்சு செவி திறன் குறைக்கும்!!!
மொபைல் நம்பர் கொடுக்காதே! வாங்காதே!!
"செவ்வாய்" சென்றாலும் உன் சொல் காக்கும்!!
அம்மா என அமைதி வரும் தோழி!!
என்றும் இளமையுடன் என் அம்மா எனக்கு வேணும்!!
அந்தவாரம் தந்து விடு!! ஆண்டவனே!!
அது போதும்!! அது போதும்!!
-------------------------------------------

புரியும் வரை சுற்றி விடு!!
புரிந்த பின்பு நின்று விடு!!
நீ உணர வேண்டும்!! அது தான் அனுபவம்!!
-------------------------------
படித்து வேறு! பிடித்தது வேறு!!நடப்பது வேறு!
நடிப்பது வாழ்க்கை!! பட்டதை சொல்லும் பாங்கு!!
காதில் கேட்டு நீ வாங்கு!!
நல்லது கெட்டது உன் மனம் சொல்லும்!! அது தான் மன சாட்சி!!
மனசாட்சிதான் கடவுள்!!! ஆக நீயே கடவுள்!! கடவுள் தப்பு
செய்ய வேண்டுமா? உணர்வது உன் கடன்!!
இதை தான் விவேகனந்தர் சொன்னார்!!
----------------------------------
பார்த்ததும் திரும்பிக்கொள்ளும்!
பார்க்காத போது பேச வரும்!!
எல்லாம் தெரியும் சொல்லும்!!
உலக அழகி நினைப்புதான்!!
உடன்படாமல் ஓடி கொல்லும்!!
மொபைல் நம்பர் தராது!!
கவிதை எழுதி கழுத்தறுக்கும் !!
இந்த பெண்ணை யாருக்கு பிடிக்கும்!!
சசிகலாவாம் சசிகலா!!
சாக சொல் அவளை!!
-------------------

காற்றை புசித்தால் பசி இல்லை!!
கடலை குடித்தால் தாகம் இல்லை!!
தீர்க்க முடிந்தால்..பிரச்சனை இல்லை!!
இன்பம் மட்டுமே மட்டுமே இருந்தால்
துன்பம் தெரியாது!!
இரவும் பகலும்..ஆணும் பெண்ணும்..
சிரிப்பும் அழுகையும்..வரவும் செலவும்
கலந்ததே வாழ்க்கை!!
ஏற்று வாழ்வோம் இணையோடு!!
காண்போம் இன்பம் துணையோடு!!
-----------------------------------

நிறை அழகு.. !! பிஞ்சுக் கை கால்கள் !!
சத்தமான அழுகை !!சிவந்து போன முகம் !!
நிர்வாண உறக்கத்தில் சிரிக்கும் பூவே!!
உன்னை சுற்றி உறவு!!
ஆட்டம்.. தூக்கம்.அமைதி..அழுகை!!.
தினம் !!தினம் !! எங்களுக்கு திருவிழா!!
உன் முகம் பார்க்க...கவலைகள்..காணவில்லை!
---------------------------------

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com




No comments:

Post a Comment