அறிவியலில் உயர்ந்தோம்! ஆற்றலில் உயர்ந்தோம்!
அறிவில் உயர்நதோமா? தாழ்ந்தோமா?
மனித நேயம் மண் மூடி போகவா
பிறந்தோம்..வளர்ந்தோம் படித்தோம்????
அந்த காலம் தொட்டு பெண்ணை அழகென்று
வர்ணித்தே அடிமை ஆக்கி
ஆண்கள் சிகரம் தொட்டார்கள் !!
பெண்ணாகி தாரமாகி தாயுமாகி நின்ற
பெண்களே பண பேயாகி வரதட்சணை
கேட்டார்கள்.. கேட்கிறார்கள்!!
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
பண்பும் பாசமும் பாதாளத்தில்!!
பெண்ணாசை பொன்னாசை பேராசை ஆகி
கலங்கி அழும் நிலை யாருக்கு?
பெண்களுக்கு சிறப்பா இது? ஏது?
சிந்திக்க மனம் இல்லையா?
ஆதிக்கம் அழிந்து அன்பு பெருகுமா?
சீரிய வாழ்வு சிரிதாகலாமா?
இளம் உள்ளம் உணரட்டும்!!
இனிய வாழ்வு மலரட்டும்!!!
No comments:
Post a Comment