Monday, March 14, 2011

மணமகளாய் மருமகளாய் வா நீ !!




மணமகளாய் மருமகளாய் வா நீ !!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ !!
உள்ளம் பெருக்கி வீடு உயர்த்த வா நீ !!
எங்கள் இதய வாசல் திறந்து இருக்கு வா நீ !!
நிலை பெருக்கும் நினைவு என்றும் மனதில் வேண்டுமே !!
நல்ல குழந்தை செல்வம் உன்னாலே வரவாகுமே !!
பொன் பொருளும் புக l என்றும் உன்னை சேருமே !!
ஆது பார்த்து எங்கள் மனம் நிறைந்து ஆடுமே !!

மணமகளாய்  மருமகளாய்  வா  நீ !!
உன்  வலது  காலை  எடுத்து  வைத்து  வா  நீ!!
திரு  மகளாய்   எங்கள்  வீடு  வந்த  செல்வமே !!
கற்றவர்கள்  வாழ்த்து  சொல்லி  வழி  காட்டுவார் !!
பிறந்தவீடும்  புகுந்த  வீடும்  உன் பெருமை  பேசணும் !!
புது  மனமும்  புது  உறவும்  சேர  வேண்டுமே !!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
தங்க  நகை  வைர  நகை தேவை  இல்லையே !!
புன்னகைத்து  புது நிலவாய்  வலம்  வருவாயே !!
சுகமான  சுமை  சேர்த்து  வாழ்ந்திருப்பாயே !!
பாசமுடன்  பழகும்  உன்னால் … பசியும்  வராதே !!
மணமகளாய் மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
ஏழு  உலகும்  போற்ற  நீயும்  வாழ்க !!
எங்கள் குல   விளக்கே !! என்றும்  நீ வாழ்க!!
மனை  மக்கள்  மாட்சியோடு  வாழ்க!!
இறுதிவரை  இன்பம்  கண்டு  வாழ்க!! வாழ்க!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!

No comments:

Post a Comment